Sunday, 11 March 2018

ஒருங்கமைவு

நீ என்னை அகன்றிருக்கும் நாட்களில்
அன்றாடத்தின் ஒழுங்கின்மை என்னை அச்சுறுத்துகிறது
பொழுதின் வெவ்வேறு முகமூடிகளுடன்
நாம் புழங்கும் ஒவ்வொரு பொருளிலும்
வெளிப்படுகிறது
நீ இல்லாமல் இருப்பதன் நிறைவின்மை
வினாடி முள்ளின் தாளம் மாறுகிறது
உதயாதி அஸ்தமனங்களிலும்
அது பிரதிபலிக்கிறது
நீ திரும்பி வந்ததும்
எல்லாம் ஒருங்கு அமைவதின்
புதிர் என்ன?