செம்பொன்னார் கோவிலிலிருந்து
நல்லாத்தூர்
செல்லும் வழியில்
இடது பக்கத்தில்
பச்சையாய் இலைகள்
எப்போதும் மூடியிருக்கும் குளப்பரப்பில்
ஒவ்வொரு சதுரடியிலும்
மலர்ந்திருக்கிறது
தாமரை
ஈர்க்கப்பட்டு
இறங்கினேன்
வழவழக்கும் கெண்டைகள்
உரசிச் சென்றன
சில்லென்ற உணர்வில்
நீரசைவில் எழுந்தன
மலரில் மறைந்திருந்த
தேன் சிட்டுகள்
ஓர் இனிய உறவைப் போல
ஓர் இனிய நினைவைப் போல
ஓர் இனிய தடாகமும்
வாழ்க்கையில்
எதிர்ப்படவே செய்கிறது
நல்லாத்தூர்
செல்லும் வழியில்
இடது பக்கத்தில்
பச்சையாய் இலைகள்
எப்போதும் மூடியிருக்கும் குளப்பரப்பில்
ஒவ்வொரு சதுரடியிலும்
மலர்ந்திருக்கிறது
தாமரை
ஈர்க்கப்பட்டு
இறங்கினேன்
வழவழக்கும் கெண்டைகள்
உரசிச் சென்றன
சில்லென்ற உணர்வில்
நீரசைவில் எழுந்தன
மலரில் மறைந்திருந்த
தேன் சிட்டுகள்
ஓர் இனிய உறவைப் போல
ஓர் இனிய நினைவைப் போல
ஓர் இனிய தடாகமும்
வாழ்க்கையில்
எதிர்ப்படவே செய்கிறது