Tuesday, 20 March 2018

மழைப்பொழுது

தொலைதூரப் பயணியின் ஆசுவாசத்தோடு
விண்ணிலிருந்து
இறங்கிக் கொண்டிருக்கிறது
மழை நீர்
மாடிப் பரப்பில் கொட்டிக் கொண்டு
கொக்குகளின் ஒற்றைக் கால்களைப் போல ஊன்றி
கொட்டகைகளின் உலோகத் தகடுகளில் ஒலியெழுப்பி
ஊடுறுவவே இல்லாத தார்ச்சாலையில் ஓடி வழிந்து கொண்டு
மேய்ச்சல் மாடுகள் புரியாமல் பார்க்கின்றன
மரக்கிளைகளில் ஒடுங்கிக் கொள்கின்றன பறவைகள்
நின்ற பின்னும் காற்றில் நிரம்பியிருக்கிறது ஈரத்தின் நீர்மை
துலக்கமாகின்றன பகல் காட்சிகள்
எங்கும் தென்படுகின்றன தூய்மையின் சுவடுகள்
செருப்புக் கால்கள் நிறையும் வரை