யாரோ ஒருத்தி
எப்போதோ அளிக்கப்பட்ட சொல்லுக்காக
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறாள்
யாரோ ஒருத்தி
ஐயங்களின் மேகங்களை மிச்சமில்லாமல் அகற்றி
முழுமையாக நம்புகிறாள்
யாரோ ஒருத்தி
உறவின் இனிமையான பொழுதுகளை
உவகையுடன் எண்ணிப் பார்க்கிறாள்
யாரோ ஒருத்தி
மனதில் ஓயாமல் உழலும்
கசந்த அவமானத்தால் அவதிப்படுகிறாள்
யாரோ ஒருத்தி
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாள்
யாரோ ஒருத்தி
பாடும் பாடலில்
தூங்குகிறது
ஒரு குழந்தை
எப்போதோ அளிக்கப்பட்ட சொல்லுக்காக
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறாள்
யாரோ ஒருத்தி
ஐயங்களின் மேகங்களை மிச்சமில்லாமல் அகற்றி
முழுமையாக நம்புகிறாள்
யாரோ ஒருத்தி
உறவின் இனிமையான பொழுதுகளை
உவகையுடன் எண்ணிப் பார்க்கிறாள்
யாரோ ஒருத்தி
மனதில் ஓயாமல் உழலும்
கசந்த அவமானத்தால் அவதிப்படுகிறாள்
யாரோ ஒருத்தி
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாள்
யாரோ ஒருத்தி
பாடும் பாடலில்
தூங்குகிறது
ஒரு குழந்தை