Saturday 19 May 2018

நினைவுகள்


தாழ்வாரங்களில் கேட்கிறது மழையின் கீதம்
தளிரின் இளம் பச்சை அளிக்கும் நம்பிக்கை
விபத்தால் வெளியேறிய ஆட்டின் குடலென மண்ணின் குழைவு
தலையால் வாங்கி கால்வரை கசிய விடும் பழு மரம்
வேடிக்கை வெறுமனே பார்க்கும் விலங்குகள்
அவ்வப்போது இருளும் பகலில்
பதறி மீளும் பறவைகள்
அன்னை முகம் நோக்கி மகவுகள்
படுக்கை ரணமாகி மரண விஸ்வரூபம் காண 
காத்திருக்கும் முதியோர்
இனிமையும்
காதலும்
காமமும்
அலைக்கழிக்கும் 
ஆண்களும் பெண்களும்

தூவானம் விடவில்லை

(நவீன விருட்சம் இதழில் பிரசுரமானது)