Tuesday 25 September 2018

நாகலிங்கம்

ஒரு பெரும் மைதானத்தின்
எல்லையில்
நிலவின் மது பரவும் இரவில்
கசிந்து கொண்டிருக்கிறது
அடர்ந்த பூவின் மணம்
நாகலிங்க மணம்

பொங்கும் நுரையீரலில்
கலக்கின்றன
மூன்று காலங்கள்

உடலின் எடை உதிர்த்து
உலவச் செல்கிறது
உயிர்
வெளியெங்கும்

சிதை நெருப்பாய்
சூழ்கிறது காற்று
தனித்திருக்கும் உடலை

பறக்கும் மேகம்
நிலவை
மூடுகையில்

உயிர்க்கிறது
உடல்
எல்லையற்ற காலத்தில்