Monday 10 December 2018

எங்கும் நிறைகிறாய்
நீ
இருள் ஆழங்களின்
அடியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
மின்மினியின்
ஒளித்துகள் போல
இன்னும் நம்புவதற்கு
இருக்கிறதென
உனது சொல்கள்
எப்படியோ
சொல்கின்றன
புன்னகைக்கும் போது
உன் முகத்தில் தோன்றும்
உணர்வு
பல பல மடங்குகளாய்
பிறை ஒளியில்
தென்படுவதை
வானில்
தற்செயலாய்
கண்டேன்
நுரை அலைகள்
மணலில்
மோதிய போது
கடலில்
நடந்த
சில அடிகளில்
உணர்ந்த சூழ்கை
எப்படியோ
உன் அருகாமையை
நினைத்துக் கொள்ளச் செய்தது

உன்னிடம்
நான் இன்னும்
கண்ணீர்
சிந்த வேண்டியிருக்கிறது

உன்னிடம்
நான் இன்னும்
என் குருதியை
பலியிட வேண்டியிருக்கிறது.