தும்பிகளெனப் பறக்கும்
உனது நினைவுகள்
மனதின் மலைப் பாறைகளை
உருகச் செய்து கொண்டிருந்தன
துயரத்தின் பாலை நிலங்களிலிருந்து
எழும் ஓயா அரற்றல்களை
ஆசுவாசப்படுத்தியது
உனது கருணை மேகங்கள்
பொழியும் மழை
முடிவிலி வரை நீளும்
கடலின் நுனியில்
ஒளிர்கிறது
உனது இருப்பின் புன்னகை
சிறு நுரையில்
தன்னை
உன் பாதத்தில் விட்டு விட்டு
பின்னால்
செல்கிறது
அலைகள் ஓயாப் பெருங்கடல்
உனது நினைவுகள்
மனதின் மலைப் பாறைகளை
உருகச் செய்து கொண்டிருந்தன
துயரத்தின் பாலை நிலங்களிலிருந்து
எழும் ஓயா அரற்றல்களை
ஆசுவாசப்படுத்தியது
உனது கருணை மேகங்கள்
பொழியும் மழை
முடிவிலி வரை நீளும்
கடலின் நுனியில்
ஒளிர்கிறது
உனது இருப்பின் புன்னகை
சிறு நுரையில்
தன்னை
உன் பாதத்தில் விட்டு விட்டு
பின்னால்
செல்கிறது
அலைகள் ஓயாப் பெருங்கடல்