Monday, 28 January 2019

அன்பின் வழியது

தும்பிகளெனப் பறக்கும்
உனது நினைவுகள்
மனதின் மலைப் பாறைகளை
உருகச் செய்து கொண்டிருந்தன

துயரத்தின் பாலை நிலங்களிலிருந்து
எழும் ஓயா அரற்றல்களை
ஆசுவாசப்படுத்தியது
உனது கருணை மேகங்கள்
பொழியும் மழை

முடிவிலி வரை நீளும்
கடலின் நுனியில்
ஒளிர்கிறது
உனது இருப்பின் புன்னகை

சிறு நுரையில்
தன்னை
உன் பாதத்தில் விட்டு விட்டு
பின்னால்
செல்கிறது
அலைகள் ஓயாப் பெருங்கடல்