Wednesday 20 February 2019

கிருஷ்ண முரளி - 11

உன்னைக் காண
புறப்படும்
ஒவ்வொரு முறையும்
முற்றிலும்
புரியாமல் போகிறது
புற உலகம்

இங்கு தான்
இத்தனை
ஆண்டுகள்
ஜீவித்திருந்தேனா

பதட்டம் கொண்டு
தடுமாறுகிறது
உனை நோக்கி நகரும்
பாதங்கள்

நீ என்னை அறிவாயா
என்னும்
ஐயம்
எப்போதும்
எழுகிறது

நீயன்றி ஏதுமில்லை
என்ற உணர்வில்
என் உயிரை
முன்வைக்கிறேன்

உன் தூய புன்னகை முன்
உன் இனிய இசையின் முன்
உன் அகத்தின் அன்பின் முன்