Thursday 14 February 2019

அலைந்து திரிதல்

வைணவ திவ்யதேசங்களுக்கும் சிவாலயங்களுக்கும் செல்லத் துவங்கிய போது நான் ஒரு முறைமையைக் கடைபிடித்தேன். ஓர் ஆலயம் செல்ல உத்தேசித்திருந்தால் வழியில் உள்ள மற்ற ஆலயங்களுக்குச் செல்ல மாட்டேன். உத்தேசித்த ஆலயத்தை சென்று பார்த்து அங்கேயே இருந்து விட்டு மாலை வீடுதிரும்புவேன். அதன் அருகில் இருக்கும் ஆலயத்துக்கு மறுவாரம் செல்வேன். அப்போது அந்த ஆலயத்தில் மட்டும் இருப்பேன். இப்படி சென்றதில் என்ன ஆயிற்று என்றால் எனது ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எல்லா பாதைகளிலும் குறைந்தபட்சம் ஓரிரு முறையாவது பயணித்திருப்பேன். பல வருடத்திற்கு பின்பு, இப்போது அந்த பாதையில் சென்றால் முதல் முறை , இரண்டாம் முறை சென்ற ஞாபகம் துல்லியமாக வருகிறது. இந்த பகுதிகளில் எனது பைக் செல்லாத சாலைகளே இல்லை என்னும் விதமாக உள்ளது. ஆனாலும் இன்னும் அதே ஆர்வத்துடனேயே இருக்கிறேன். கிளம்புகிறேன்.