Friday, 22 February 2019

ஸ்திதி

உன்னிடம் பேசிக் கொண்டேயிருந்தேன்
என் அகம் முழுதும் முன்வைத்திட முயன்று
பேசும் தோறும் பெரிதாகிக் கொண்டேயிருந்தது அக உலகம்
நீ அவ்வப்போது புன்னகைத்தாய்
எப்போதாவது தலைகோதினாய்
சிலமுறை தோளில் சாய்ந்து கொண்டாய்
நான் எப்போதோ யாரிடமோ கேட்க வேண்டிய
மன்னிப்பை உன்னிடம் கேட்டேன்
நீ மௌனித்திருந்தாய்
வீசிய காற்று கடந்து சென்ற பின்
அசையாது நிற்கும் மரம் என