இளம் தூறல் மழைப்பொழுதில்
துப்பட்டாவால் முக்காடிட்டு
அவசரமாக நடந்து வரும்
அந்த இளம் பெண்
ஒரு நனைந்த புல்லைப் போலவும்
உற்சாகமாய் உதிரும் மலரைப் போலவும்
ஓர் ஈரமான கூழாங்கல் போலவும்
ஒரு வண்ண வானவில்லைப் போலவும்
ஒன்றாய்த்
தோன்றுவது தான்
எப்படி?
துப்பட்டாவால் முக்காடிட்டு
அவசரமாக நடந்து வரும்
அந்த இளம் பெண்
ஒரு நனைந்த புல்லைப் போலவும்
உற்சாகமாய் உதிரும் மலரைப் போலவும்
ஓர் ஈரமான கூழாங்கல் போலவும்
ஒரு வண்ண வானவில்லைப் போலவும்
ஒன்றாய்த்
தோன்றுவது தான்
எப்படி?