Monday, 18 February 2019

ஏகம்

இளம் தூறல் மழைப்பொழுதில்
துப்பட்டாவால் முக்காடிட்டு
அவசரமாக நடந்து வரும்
அந்த இளம் பெண்
ஒரு நனைந்த புல்லைப் போலவும்
உற்சாகமாய் உதிரும் மலரைப் போலவும்
ஓர் ஈரமான கூழாங்கல் போலவும்
ஒரு வண்ண வானவில்லைப் போலவும்
ஒன்றாய்த்
தோன்றுவது தான்
எப்படி?