Monday, 18 February 2019

செஞ்சடையான்
வியாழனுக்கு
வாக்களித்த தலத்தில்
அப்பன் முன்
தேவாரம் பாடுகிறார்
ஆயிரம் பிறை கண்ட
முதியவர்
எத்தனை பகலிரவுகள்
எத்தனை எத்தனை
இறக்க ஏற்றங்கள்
பேசத் துவங்காத பாலனுக்கு
நீறு பூசச் சொல்கிறாள்
அவன் அன்னை
தன்
ஓய்ந்த மனத்தின்
அமைதியையும்
இனிமையையும்
விபூதி குங்குமமாய்
இட்டு
குழந்தை கண்டு சிரித்தார்
முதியவர்
எதையோ புரிந்து கொண்டது
போல
பதில் சிரிப்பு
சிரித்தது
குழந்தை