செஞ்சடையான்
வியாழனுக்கு
வாக்களித்த தலத்தில்
அப்பன் முன்
தேவாரம் பாடுகிறார்
ஆயிரம் பிறை கண்ட
முதியவர்
எத்தனை பகலிரவுகள்
எத்தனை எத்தனை
இறக்க ஏற்றங்கள்
பேசத் துவங்காத பாலனுக்கு
நீறு பூசச் சொல்கிறாள்
அவன் அன்னை
தன்
ஓய்ந்த மனத்தின்
அமைதியையும்
இனிமையையும்
விபூதி குங்குமமாய்
இட்டு
குழந்தை கண்டு சிரித்தார்
முதியவர்
எதையோ புரிந்து கொண்டது
போல
பதில் சிரிப்பு
சிரித்தது
குழந்தை
வியாழனுக்கு
வாக்களித்த தலத்தில்
அப்பன் முன்
தேவாரம் பாடுகிறார்
ஆயிரம் பிறை கண்ட
முதியவர்
எத்தனை பகலிரவுகள்
எத்தனை எத்தனை
இறக்க ஏற்றங்கள்
பேசத் துவங்காத பாலனுக்கு
நீறு பூசச் சொல்கிறாள்
அவன் அன்னை
தன்
ஓய்ந்த மனத்தின்
அமைதியையும்
இனிமையையும்
விபூதி குங்குமமாய்
இட்டு
குழந்தை கண்டு சிரித்தார்
முதியவர்
எதையோ புரிந்து கொண்டது
போல
பதில் சிரிப்பு
சிரித்தது
குழந்தை