Thursday 11 April 2019

சரண்

நீ
காலையில் கடலெழும் சூரியனாக
பின்னர்
அந்தி நிலவாக
பின்னர்
மாலையின் முதல் நட்சத்திரமாக
பின்னர்
ஒரு விறகு அடுப்பின் நெருப்பாக
பின்னர்
நதியில் மிதக்கும் தீச்சுடராக
பின்னர்
சின்னஞ்சிறு அருமணியாக
மாறிக் கொண்டிருந்தாய்
உயிர்க்கடலின் ஒரு துளியாக
உன் பொட்டு
புருவங்களுக்கு இடையே
ஒளிரத் துவங்கியது