Friday 12 April 2019

மீட்சி

இந்த தனிமையை
எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்வது
இந்த துயரத்தை
யாரிடம் பகிர்ந்து கொள்வது
காலையின் விடிவெள்ளி அவ்வளவு தனியாக நின்றிருக்கிறது
அலைகளின் சங்கீதம் நள்ளிரவில் ஊருக்குள் வருகிறது
முன்நிசியில் எவருமற்ற மாடியில் தென்றல் உலவிச் சென்றிருக்கிறது
கருமேகத்திரள் மழை தருமா என ஏங்கிப் பார்க்கிறது மானாவாரி பயிர்
இன்னும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும்
அடர்ந்த
பாதைகளற்ற
முடிவற்ற
பெருவெளியிலிருந்து