அந்திப் பொழுதில்
மண் சாலையில்
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறவன்
பாரமின்மையை உணர்கிறான்
ஓய்வுக்கான நீண்ட இரவு
நட்சத்திரங்களுடன்
கைப்பையில்
இனிப்புகள்
பச்சைக் காய்கறிகள்
நடந்து செல்கின்றன
சமையலறை வாசம் நோக்கி
மனதில் எதுவுமில்லை
அமிழ்ந்திருக்கும்
உயிர் முளைக்கும்
கணம்
நாளின் எக்கணம்