Monday 22 March 2021

உன் முன் பணிகிறேன்

உன் மென்மையின் முன்
உன் இசையின் முன்
உன் இனிய சொற்களின் முன்

உனது ஆலயம்
விசாலமாய் இருக்கிறது

உன்னைப் பார்த்துக் கொண்டு
உன்னை
எப்போதும் பார்த்துக் கொண்டு
இருந்து விடுகிறேன்

காலம்
நீண்டது
முடிவற்றது
நான் அறிவேன்

உன் கருணைப் பார்வையால்
நான்
இல்லாமல்
போகட்டும்

விசாலமாய் இருக்கிறது
உனது ஆலயம்