உன் முன் பணிகிறேன்
உன் மென்மையின் முன்
உன் இசையின் முன்
உன் இனிய சொற்களின் முன்
உனது ஆலயம்
விசாலமாய் இருக்கிறது
உன்னைப் பார்த்துக் கொண்டு
உன்னை
எப்போதும் பார்த்துக் கொண்டு
இருந்து விடுகிறேன்
காலம்
நீண்டது
முடிவற்றது
நான் அறிவேன்
உன் கருணைப் பார்வையால்
நான்
இல்லாமல்
போகட்டும்
விசாலமாய் இருக்கிறது
உனது ஆலயம்