இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியாவை உணவுப் பஞ்சம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. இன்று அதனை நம்புவது கடினம். அன்று அது யதார்த்தம். அந்த பஞ்ச காலகட்டத்தை அந்த காலகட்டத்தின் மனிதர்களின் இயல்புகளை சுபாவங்களை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட கதை தி.ஜா வின் ‘’பஞ்சத்து ஆண்டி’’.