அதிகாலையிலேயே நடக்கத் தொடங்கி விட்டேன்
விண்மீன்கள் நிலவு பார்த்துக் கொண்டிருந்தன
வெள்ளி ஆர்வம் மிகக் கொண்டு கண்டது
கதிர் ஒளி குறைவாயிருந்த பகுதியிலிருந்து
கதிர் ஒளி மிகுந்திருந்த பகுதிக்கு
எப் போது வந்து சேர்ந்தேன் என
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
நட்சத்திரங்களைத் தன்னுள் ஏந்திக் கொண்டது ஒளி சூரியன்
வெட்டவெளி வானத்தில்
சிறிதினும் சிறிதான பரப்பொன்றில்
இருந்தது மேகத்திரள் ஒன்று
அதனுள் மறைந்த சூரியன்
அடர்ந்திருந்த மரம் ஒன்றின்
உச்சிப்பகுதியில் ஒளி முடி சூட்டியது
அக் கணமும் தெய்வமான
அதன்
தரிசனம் கண்டேன்
அப்பொழுது