Thursday, 15 March 2018

காதலாகி

இமைக்காது விழி நோக்கி
மென் காற்றின் சலனங்களில் அலை மோதி
ஈர இரவுகளில் மோனித்திருந்து
நினைவுகளின் நறுமணங்களைப் பரவ விட்டுக்கொண்டு

ஓர் அழைப்பாய்
ஒரு சரணாகதியாய்
கசிந்து உருகி காதல் கொண்டது
ஒரு மலரிடம்

முற்றத்து
தொட்டிச் செடியில்
மலர்ந்திருந்த
ஒரு மலரிடம்