Sunday 18 March 2018

நித்தம்

தட்டித் திறக்காத கதவுகள்
சொல்லிக் கேட்காத மனிதர்கள்
கைவிட்டுப் போன வாய்ப்புகள்
இழந்த காதல்கள்
பிரிந்த நட்புகள்
நினைவில் அழிந்து போன நாட்கள்
மீளா சாதாரணத்துவத்தின்
கேடயம் ஏந்தி
சமருக்குச் செல்கிறேன்
வாள் இல்லாமல்
தினமும்