Monday 19 March 2018

அலைத்தீவு

கருக்கிருட்டில்
படகுக்காய்
காத்திருந்தோம்
அருகாமைத் தீவு செல்ல

இருள் முறியா
கணம்
ஒன்றில்
துவங்கியது
எம் பயணம்

யாம் முதலில் பெற்றது
உப்புநீர்க் காற்று
பயணத் தள்ளாட்டம்
விடியலின் சிவப்புச் சூர்யோதயம்
எலுமிச்சையின் வாசம்

பெருநகரின் மனிதத்திரளாய்
சூழ்ந்திருந்தது நீர்
அன்னிய அசௌகர்யத்தால்
எம்பிப் பார்த்தன மீன்கள்

உச்சி வெயில் நின்றிருந்த
கடல் உணவுகள் உப்பிட்டு காயவைக்கப்பட்டிருந்த
வலைகள் உலர்ந்து கொண்டிருந்த
தீவில்
அப்பொழுது
யாரும் இல்லை