Tuesday 27 March 2018

ருத்ரப் பிரயாகை


பெரும் புயலாய் காற்று வீசிய நாளில்
அன்றும்
கால நதியில் மிதந்து கொண்டிருந்தன உயிர்கள்
நதி அரிக்கும் மணல் கீழிருக்க
எனது கவசங்களைத் துறந்து
நின்று கொண்டிருக்கிறேன்
ஊழிக் கூத்தின் முன்பு
கருப்பையின் அசைவுகளாய்
புவியும் இருளும் 
நான் பெருகிக் கொண்டேயிருக்கிறேன்
மணல் துகள் எண்ணிக்கையில்
ருத்ரப் பிரவாகமாக