Sunday 15 April 2018

கடந்து செல்பவனின் துயரங்கள்


பயணத்தில்
கைவிடப்பட்ட கடவுள்கள் இருக்கிறார்கள்
கைவிடப்பட்ட நகரங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட மண்டபங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட கிராமங்கள் இருக்கின்றன
கைவிடப்பட்ட பெண்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்

கைவிடப்படுதலின் பிரும்மாண்டத்தின் முன்
கடந்து செல்பவன் மௌனித்திருக்கிறான்
ஒரு பெரிய கான்கிரீட் பாலக் கட்டுமானம் நடைபெறுகிறது
அதன் அருகே ஓடக்காரன் படகை இயக்கிக் கொண்டிருக்கிறான்
பாலம் வேலை முடிந்த பின் நீ ஓடத்தைக் கைவிடுவாயா
பயணி கேட்கிறான்

நான் நதியைக் கடந்து கொண்டே இருந்தேன்
ஓடம் இன்றி மக்கள் நதியைக் கடப்பது பார்த்து மகிழ்வேன்
ஓடக்காரன் பதில் சொன்னான்