Thursday 10 May 2018

மண் பூக்கும் நிலம்

வானம் கரு கொண்ட 
நாள் ஒன்றில்
காணா பிரதேசம் ஒன்றுக்கு
உடன் 
மழை வர
தரை மார்க்கமாய்
பயணித்தேன்

மண் நின்ற
கிளைகளில்
பொற்கதிர்
மண் சாய்ந்த நிலம்
கடந்து போனேன்

அதலம்
கொதி குழம்பாய்
லட்சம்
ஆண்டுகளுக்கு
முன்னால்
பொங்கி வந்த
மண்ணில்
இப்போது
மீன்கள் நீந்திய சுனையில்
ஆடையற்ற குழந்தைகள்
குதித்துக் கும்மாளம் போட்டன
எப்போதோ பூக்கும் பல்லாண்டு
மரத்தோப்பு
மத் திய நேரத்தில்
ஆசுவாசமாய் வேடிக்கை பார்த்தது
சூழலையும் சுற்றத்தையும்

மலை உடைந்து
கூழாங் கல் ஆன நிலத்தில்
மஞ்சள் மலர்
கதிர்
பார்த்து
சிரித்தது