பிரபு மயிலாடுதுறை
Saturday 12 May 2018
குளக்கரை மரத்தடியில்
நூறாண்டுகளாய்
அமர்ந்திருக்கும்
பிள்ளையாருக்கு
எட்டு ஆண்டு அகவை கொண்ட
சிறுமி
அருகம்புல் மாலை சாத்துகிறாள்
சிறுமியின் கொடிவழியை
நினைவு கூர்ந்து
மலைக்கிறார்
கண ஈசர்
Newer Post
Older Post
Home