Saturday 12 May 2018

குளக்கரை மரத்தடியில்
நூறாண்டுகளாய்
அமர்ந்திருக்கும்
பிள்ளையாருக்கு
எட்டு ஆண்டு அகவை கொண்ட
சிறுமி
அருகம்புல் மாலை சாத்துகிறாள்

சிறுமியின் கொடிவழியை
நினைவு கூர்ந்து
மலைக்கிறார்
கண ஈசர்