Monday 14 May 2018

தாயகம்


காலைப்பொழுதில் நெடுஞ்சாலையில் குடத்துடன் நடந்து கொண்டிருக்கிறாள் ஒரு பெண்
தேனீர்க்கடையின் கண்ணாடி தம்ளர்களை கழுவிக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி
தூங்கி எழுந்து அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு ரொட்டியுடன் காய்ச்சிய பால் தருகிறாள் ஓர் அன்னை
கல்லூரிக்குச் செல்ல பெட்ரோல் நிரப்ப வருகிறாள் யுவதி
முன்பகலில் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறாள் நடுவயதுப் பெண்
பனிமூட்டம் முழுதகலாத பொழுதில் தேர்வுக்குச் செல்கின்றனர் சிறுமிகள்
வங்கி பணம் செலுத்து சீட்டில் முத்திரையை சத்தமாகப் பதிக்கிறார் பெண் காசாளர்
விரைந்து செல்லும் வாகனத்தின் வயர்லெஸ்ஸில் அலுவலர்களுக்கு குறிப்பு அளிக்கிறார் பெண் அதிகாரி
பள்ளி முடிந்த பின் மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கிறார் ஆசிரியை
துர்க்கையின் ஆலயத்தில் அகல் தீபம் ஏற்றுகின்றனர் இளம்பெண்கள்
மானுடரின் பிரார்த்தனைகளை கேட்டுக் கொண்டு நடந்து கொண்டே இருக்கிறாள் கங்கை