Monday 14 May 2018

கூற நினைத்து
சொல் சேர்த்து
ஒத்திகை பலமுறை பார்த்து
எப்போதுமே
சொல்லாத சொற்கள்

ஆங்காங்கே தனித்திருக்கின்றன
பூஞ்சோலைகளாக
மலைப் பாறைகளாக
திக்குத் தெரியாத காடாக
கடற்கரை மணற்பரப்பாக

அன்னியனாக
சென்று வருவதுண்டு
அவ்வப்போது