Wednesday 22 August 2018

ஒரு துயரத்தின் முன்
ஒரு துக்கத்தின் முன்
ஒரு கைவிடுதலின் முன்
ஒரு துரோகத்தின் முன்
ஒரு அவமானத்தின் முன்
தீரா வாதை ஒன்றின் முன்

ஓசைகள் ஏதுமற்ற ஓர் உலகம் இருக்கிறது

பின்னர்
ஓயாது அரற்றும்
ஓர் அலறலும்
சில கண்ணீர்த்துளிகளும்

மௌனம்
நிரம்பியிருக்கிறது
தெளிந்த உலகத்தில்