Thursday 23 August 2018

மீண்டும் ஒருமுறை
இன்று
பொழுது விடிந்திருக்கிறது
புலரியின் முதற்புள் ஒலி கேட்டிருக்கிறது
செங்கதிர்
அலைகளிலிருந்து எழுந்து
மேகங்களில் மறைந்து சஞ்சரிக்கிறது
தவ்விய தவளை
உருவாக்கிய அதிர்வுகள்
குளத்து நீரில் மேலும் கீழும்
எழுந்து விழுகிறது
கொத்தப்பட்ட மீன்கள்
நீந்திக்கொண்டிருக்கின்றன
வானத்தில்