Sunday 30 December 2018

மழையாவது

அன்பையும் சொல்லையும் இணைப்பது எப்படி என்பது இன்னும் தெரியாமலே இருக்கிறது
உனக்கு என்ன பரிசு தருவது என்பதை முடிவுசெய்ய முடியாமல்
வெறும் கைகளுடன் வந்து சேர்கிறேன்
எவ்வளவு
உணர்ந்த பின்னும்
உச்சரிக்கப்பட்ட
எத்தனை
சொற்களுக்கு அப்பாலும்
அகம் நொறுங்கும் வலியின் சத்தம்
ஒரு பேப்பர் வெயிட் தரையில் விழுவதாகவோ
உடையும் கண்ணாடி வளையல்களைப் போலவோ
அணிலின் இடையறாத கிரீச்சிடலாகவோ
மனதைப் பிசைகிறது
மேகத்துக்கும்
மண்ணுக்கும்
இடையில் இருப்பது தானே
மழை