Friday 11 January 2019

மதி நிறைந்த இரவு

மௌனத்தைப் போல
நிலவொளி பரவிச் செல்லும்
இந்த
நள்ளிரவில்
உறக்கம் நிறைகிறது
பிரதேசம் எங்கும்
எல்லா கடிகாரங்களும்
இயங்கும் ஒலியை
துளித் துளியாய்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன
இரு செவிகள்
கால கால மாக