அன்று
நகரம் வழக்கம்போலவே இயங்கியது
யாரும் வான் பார்க்கவில்லை
கொட்டும் இலைகளும் மலர்களும்
பொது கவனத்தில் இல்லை
மின்சார விளக்குகளின் அடர்த்தியில்
அந்திப் பொழுது விலகி நின்றிருந்தது
ரெயில்வே நிலைய ஆலமரத்தில்
தினமும் கூடடையும்
பறவைகளின் பெரு ஒலியை
வியந்து பார்த்தான்
ஊருக்கு முதல் முறை
பாஸஞ்சரில்
வந்து சேர்ந்த பயணி
தீச்சுடர் ஒன்று ஒளிரும் அறையில்
அமர்ந்திருக்கிறாய்
நீ
சுவாசமே
தியானமாக
நகரம் வழக்கம்போலவே இயங்கியது
யாரும் வான் பார்க்கவில்லை
கொட்டும் இலைகளும் மலர்களும்
பொது கவனத்தில் இல்லை
மின்சார விளக்குகளின் அடர்த்தியில்
அந்திப் பொழுது விலகி நின்றிருந்தது
ரெயில்வே நிலைய ஆலமரத்தில்
தினமும் கூடடையும்
பறவைகளின் பெரு ஒலியை
வியந்து பார்த்தான்
ஊருக்கு முதல் முறை
பாஸஞ்சரில்
வந்து சேர்ந்த பயணி
தீச்சுடர் ஒன்று ஒளிரும் அறையில்
அமர்ந்திருக்கிறாய்
நீ
சுவாசமே
தியானமாக