Monday 21 January 2019

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அன்று
நகரம் வழக்கம்போலவே இயங்கியது
யாரும் வான் பார்க்கவில்லை
கொட்டும் இலைகளும் மலர்களும்
பொது கவனத்தில் இல்லை
மின்சார விளக்குகளின் அடர்த்தியில்
அந்திப் பொழுது விலகி நின்றிருந்தது
ரெயில்வே நிலைய ஆலமரத்தில்
தினமும் கூடடையும்
பறவைகளின் பெரு ஒலியை
வியந்து பார்த்தான்
ஊருக்கு முதல் முறை
பாஸஞ்சரில்
வந்து சேர்ந்த பயணி
தீச்சுடர் ஒன்று ஒளிரும் அறையில்
அமர்ந்திருக்கிறாய்
நீ
சுவாசமே
தியானமாக