Saturday 5 January 2019

நிலைமனம்

உன் உடன் இருக்கும் பொழுதுகளில்
எங்கும் நிறைகிறது
இசை பரவும் சூழலின்
எடையின்மைகள்
வலி நீங்கும் கணத்தின்
நிம்மதிகள்
மன்னிக்கப்பட்டதன்
விடுதலை

உன்னை எண்ணும் போது
மண்ணிலிருந்து விண்ணுக்கு
சஞ்சரிக்கும்
விருட்சமென
அகம் எழுகிறேன்

அப்போது வீசும் காற்றில்
சலசலக்கும்
இலைகள்
கண்டு
மகிழ்கிறான்
ஓய்வெடுக்கும்
வழிப்போக்கன்