உன் உடன் இருக்கும் பொழுதுகளில்
எங்கும் நிறைகிறது
இசை பரவும் சூழலின்
எடையின்மைகள்
வலி நீங்கும் கணத்தின்
நிம்மதிகள்
மன்னிக்கப்பட்டதன்
விடுதலை
உன்னை எண்ணும் போது
மண்ணிலிருந்து விண்ணுக்கு
சஞ்சரிக்கும்
விருட்சமென
அகம் எழுகிறேன்
அப்போது வீசும் காற்றில்
சலசலக்கும்
இலைகள்
கண்டு
மகிழ்கிறான்
ஓய்வெடுக்கும்
வழிப்போக்கன்
எங்கும் நிறைகிறது
இசை பரவும் சூழலின்
எடையின்மைகள்
வலி நீங்கும் கணத்தின்
நிம்மதிகள்
மன்னிக்கப்பட்டதன்
விடுதலை
உன்னை எண்ணும் போது
மண்ணிலிருந்து விண்ணுக்கு
சஞ்சரிக்கும்
விருட்சமென
அகம் எழுகிறேன்
அப்போது வீசும் காற்றில்
சலசலக்கும்
இலைகள்
கண்டு
மகிழ்கிறான்
ஓய்வெடுக்கும்
வழிப்போக்கன்