Saturday 5 January 2019

அன்பின் ரசவாதம்

நான் ஒரு ரசவாதி
கூழாங்கற்களை கோபுரங்கள் ஆக்கினேன்
மலரை நிலவாக்கினேன்
தீயைப் பசும் தளிர்களாக்கினேன்
அமிர்தத் துளிகளை குழந்தைகளாக்கினேன்
இசையை மழலைச்சொல் ஆக்கினேன்
மழைத் துளியை தானிய மணிகளாக்கினேன்
காற்றில் எழும் மென்பஞ்சை சிட்டுக்குருவிகளாக்கினேன்
நட்சத்திரங்களை குளத்து மீன்களாக்கினேன்
சூரியனை சோளக்கதிராக்கினேன்

உன்னை எண்ணும் தோறும்

கணந்தோறும்
என்னை
மாற்றிக் கொண்டேயிருக்கும்
உன் ரசவாதம்
என்ன