Saturday, 26 January 2019

கருணா சாகரம்

நான்

அன்பின் சாரல்களை
அன்பின் மழையை
மலர்ந்திருக்கும் அன்பின் தடாகங்களை
அன்பின் ஊற்றுக்களை
அன்பின் சிறு சிறு வாய்க்கால்களை
எதிர்பாராத அன்பின் காட்டாறுகளை
அன்பின் மென்னலை எழும் நதிகளை

கண்டிருக்கிறேன்

நீ
அன்பின்
பெருங்கடல்