Saturday 16 February 2019

ஒன்றே குலம்


காகிதத் தாள் போல் மலர்ந்துள்ளன தும்பைப் பூக்கள்
நெல்லுக்குப் பாய்கிறது மூழ்கிய மோட்டார் வெளித்தள்ளும் நீர்
கதிருக்கும் கதிருக்கும் இடையே  பின்னியிருந்த வலையில் சிலந்தி
ஆசுவாசமான கரிச்சான்கள் வெறுமே அமர்ந்திருக்கின்றன மின்கம்பிகளில்
பாதுகாப்பான சாலைதானா என பரிசோதிக்கும் கீரி கடந்து செல்கிறது
குளத்து மீனுக்காக விண்ணில் அலைகிறது ஒற்றைப் பருந்து