Friday 15 February 2019

அதிகாலையில் நடப்பவன்



அந்த சிறுநகரத்தில்
அதிகாலையில் நடப்பவன்
சில சௌகரியங்களைப் பெறுகிறான்
எல்லாருக்குமான
யாரும் கேட்காத 
பேரமைதி நிலத்தில்
வான் மீன்கள்
ஒளி ஆற்றில்
மூழ்கப் போகும்
பொழுதில்
சில்வண்டுகளின் பிராத்தனை நிறைவில்
நடந்து செல்பவன்
சில கணங்கள்
பறந்தும் செல்கிறான்
அவனுக்கே தெரியாமல்