யாருமற்றிருக்கிறது
ஆயிரத்து நானூறு ஆண்டு
ஆலயம்
தேசாந்திரி
நுழைகையில்
தாயார் சன்னிதியிலும்
சிவன் சன்னிதியிலும்
ஓரிரு
அகல் தீபம்
மெலிதாக
அசைந்து கொண்டிருந்தது
எப்போதும்
அங்கிருக்கும்
புறா
எங்கோ
சென்று விட்டு
சிறகுகளை படபடத்து
வந்தமர்கிறது
ஆலமர் இறைவன்
தெற்கே
பார்த்துக் கொண்டிருக்கிறான்
அம்மையப்பன்
முன் அமர்ந்து
கண்மூடுகிறான்
தருணங்களை
வாழ்ந்து செல்பவன்
அகத்தில்
ஆலய மௌனம்
குடியேற
பலிபீடத்தில்
நெடுஞ்சாண் கிடையாய்
தன்னை
வைக்கிறான்
ஆயிரத்து நானூறு ஆண்டு
ஆலயம்
தேசாந்திரி
நுழைகையில்
தாயார் சன்னிதியிலும்
சிவன் சன்னிதியிலும்
ஓரிரு
அகல் தீபம்
மெலிதாக
அசைந்து கொண்டிருந்தது
எப்போதும்
அங்கிருக்கும்
புறா
எங்கோ
சென்று விட்டு
சிறகுகளை படபடத்து
வந்தமர்கிறது
ஆலமர் இறைவன்
தெற்கே
பார்த்துக் கொண்டிருக்கிறான்
அம்மையப்பன்
முன் அமர்ந்து
கண்மூடுகிறான்
தருணங்களை
வாழ்ந்து செல்பவன்
அகத்தில்
ஆலய மௌனம்
குடியேற
பலிபீடத்தில்
நெடுஞ்சாண் கிடையாய்
தன்னை
வைக்கிறான்