Friday, 15 February 2019

கண்டறியாதன

யாருமற்றிருக்கிறது
ஆயிரத்து நானூறு ஆண்டு
ஆலயம்
தேசாந்திரி
நுழைகையில்
தாயார் சன்னிதியிலும்
சிவன் சன்னிதியிலும்
ஓரிரு
அகல் தீபம்
மெலிதாக
அசைந்து கொண்டிருந்தது
எப்போதும்
அங்கிருக்கும்
புறா
எங்கோ
சென்று விட்டு
சிறகுகளை படபடத்து
வந்தமர்கிறது
ஆலமர் இறைவன்
தெற்கே
பார்த்துக் கொண்டிருக்கிறான்
அம்மையப்பன்
முன் அமர்ந்து
கண்மூடுகிறான்
தருணங்களை
வாழ்ந்து செல்பவன்
அகத்தில்
ஆலய மௌனம்
குடியேற
பலிபீடத்தில்
நெடுஞ்சாண் கிடையாய்
தன்னை
வைக்கிறான்