பர்வதங்களுக்கு இடையே
கலனில் நிரம்பும் நீராய்
வெயில்
சேகரமாகும்
கோடைப் பொழு்தில்
மாலைத் தென்றல்
உனது முதல் அறிமுகம்
ஆர்வமோ
மகிழ்ச்சியின் சமிங்ஞைகளோ
இல்லா
அடுத்தடுத்த சந்திப்புகள்
ஆராதனைகளும்
அவமதிப்பும்
பரஸ்பரம்
நிகழ்ந்த
சாதாரண உலகம் தான்
உன்னுடையதும்
என்பது
நம்ப இயலாததாய்
பின்னொரு பனிப் பருவம்
பகலிலும்
புகைப் படலமாய்
பனி எழும் ஊரில்
முன் மதியத்தில்
நீ அங்காடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாய்
நாளும் இரவும்
சந்திக்கும் தளத்தில்
ஒரு குன்றின் அடிவாரக் கோவிலுக்கு
உன் அகலின் ஒரு தீபம்
வான்மீனாகி மேலெழுந்தது
மின்மினிகள் மினுக்கும்
நிலவற்ற இருளில்
பூட்டப்பட்ட அறையினுள்
தனிமையும் தவிப்புமாய்
நீ
சொல் எழா மௌனங்கள்
நீர் தேங்கா விழிகள்
ஒளி கொள்ளா பொழுதுகள்
சாதாரணத்தின் சராசரித் தன்மையிலும்
உனை
பொருத்தவே செய்கின்றாய்
எல்லாம் அறிந்திருந்தும்
கடந்து செல்கையிலே
ஒன்றும் கூறாமல்
கலனில் நிரம்பும் நீராய்
வெயில்
சேகரமாகும்
கோடைப் பொழு்தில்
மாலைத் தென்றல்
உனது முதல் அறிமுகம்
ஆர்வமோ
மகிழ்ச்சியின் சமிங்ஞைகளோ
இல்லா
அடுத்தடுத்த சந்திப்புகள்
ஆராதனைகளும்
அவமதிப்பும்
பரஸ்பரம்
நிகழ்ந்த
சாதாரண உலகம் தான்
உன்னுடையதும்
என்பது
நம்ப இயலாததாய்
பின்னொரு பனிப் பருவம்
பகலிலும்
புகைப் படலமாய்
பனி எழும் ஊரில்
முன் மதியத்தில்
நீ அங்காடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாய்
நாளும் இரவும்
சந்திக்கும் தளத்தில்
ஒரு குன்றின் அடிவாரக் கோவிலுக்கு
உன் அகலின் ஒரு தீபம்
வான்மீனாகி மேலெழுந்தது
மின்மினிகள் மினுக்கும்
நிலவற்ற இருளில்
பூட்டப்பட்ட அறையினுள்
தனிமையும் தவிப்புமாய்
நீ
சொல் எழா மௌனங்கள்
நீர் தேங்கா விழிகள்
ஒளி கொள்ளா பொழுதுகள்
சாதாரணத்தின் சராசரித் தன்மையிலும்
உனை
பொருத்தவே செய்கின்றாய்
எல்லாம் அறிந்திருந்தும்
கடந்து செல்கையிலே
ஒன்றும் கூறாமல்