Sunday 24 February 2019

பர்வதங்களுக்கு இடையே
கலனில் நிரம்பும் நீராய்
வெயில்
சேகரமாகும்
கோடைப் பொழு்தில்
மாலைத் தென்றல்
உனது முதல் அறிமுகம்

ஆர்வமோ
மகிழ்ச்சியின் சமிங்ஞைகளோ
இல்லா
அடுத்தடுத்த சந்திப்புகள்

ஆராதனைகளும்
அவமதிப்பும்
பரஸ்பரம்
நிகழ்ந்த
சாதாரண உலகம் தான்
உன்னுடையதும்
என்பது
நம்ப இயலாததாய் 

பின்னொரு பனிப் பருவம்
பகலிலும்
புகைப் படலமாய்
பனி எழும் ஊரில்
முன் மதியத்தில்
நீ அங்காடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாய்

நாளும் இரவும்
சந்திக்கும் தளத்தில்
ஒரு குன்றின் அடிவாரக் கோவிலுக்கு
உன் அகலின் ஒரு தீபம்
வான்மீனாகி மேலெழுந்தது

மின்மினிகள் மினுக்கும்
நிலவற்ற இருளில்
பூட்டப்பட்ட அறையினுள்
தனிமையும் தவிப்புமாய்
நீ

சொல் எழா மௌனங்கள்
நீர் தேங்கா விழிகள்
ஒளி கொள்ளா பொழுதுகள்
சாதாரணத்தின் சராசரித் தன்மையிலும்
உனை
பொருத்தவே செய்கின்றாய்

எல்லாம் அறிந்திருந்தும்
கடந்து செல்கையிலே
ஒன்றும் கூறாமல்