Monday 25 February 2019

உன்

மொழி ஏற்ற இறக்கங்களாலான இசையாகிறது
பார்வைகள் பிரியத்தின் சாரலாய் வீசுகின்றன
பக்குவமான சொற்களில் வெளிப்படுவது மாறாத நீதியின் சாரம்
மகிழ்ச்சிகள் வாழ்வின் எல்லையில்லா கருணையின் வெளிப்பாடாக
துக்கம் ஆழமான மௌனமாகிறது
நம்பிக்கைகள் வான் வரை உயர்கின்றன
விருப்பத்தின் சங்கேதங்கள்
உருவாக்குகின்றன ஓர் இணை உலகை

எப் போது
எவ் வாறு
நான் உன்னிடமிருந்து விலகிச் சென்றேன்
எப் படி
நீ
என்னைத் தவற விட்டாய்