Thursday, 14 February 2019

கவிஞன் என்ன செய்கிறான்

வெட்டவெளியின் கீழே நிற்கிறான்
பூமிப் பரப்பெலாம் நடந்து திரிகிறான்
பெரிய கடலில் நீந்தித் திளைக்கிறான்
சிகரங்களைத் துழாவ முன்னேறுகின்றன
அவன் கால்களும் கைகளும்
மலர் உதிர்க்கும் மரங்கள் முன் பரவசம் கொள்கிறான்
சின்னக் குருவிகள் போல் உற்சாகமாய்ப் பாடுகிறான்
மனித முகங்களுக்கு மானுடக் கதை சொல்கிறான்
விடு பட்டு
இன்புற் றிருக்கிறான்