நாம் ஓர் உலகத்தை உருவாக்கினோம்
அதில்
எப்போதும் ஓர் உயர் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது
எங்கும் பரவியிருந்தது முடிவற்ற இனிமை
யாவும் ஒன்றே என்ற உணர்வில்
லயித்திருந்தது வாழ்க்கை
உமையவளிடமிருந்து
பகடையைப் பெற்றான்
சதாசிவன்
நாம் உருவாக்கிய உலகம் இருந்தது
பல குரல்கள் எழுந்தன
பல இசைகள் ஒலித்தன
நான் நான் நான் என ஆர்ப்பரித்த
நானாவித ஜீவிதம்
முடிவடையா யுத்தத்தைத் துவக்கின
பூத கணங்கள்
கூட்டமாய்
வந்து சேர்ந்தன
அம்மையப்பன்
தரிசனம் தர
புறப்பட்டனர்
நாம் உருவாக்கிய உலகில்
நீ இருந்தாய்
நான் இருந்தேன்
உலகம் இருந்தது
அதில்
எப்போதும் ஓர் உயர் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது
எங்கும் பரவியிருந்தது முடிவற்ற இனிமை
யாவும் ஒன்றே என்ற உணர்வில்
லயித்திருந்தது வாழ்க்கை
உமையவளிடமிருந்து
பகடையைப் பெற்றான்
சதாசிவன்
நாம் உருவாக்கிய உலகம் இருந்தது
பல குரல்கள் எழுந்தன
பல இசைகள் ஒலித்தன
நான் நான் நான் என ஆர்ப்பரித்த
நானாவித ஜீவிதம்
முடிவடையா யுத்தத்தைத் துவக்கின
பூத கணங்கள்
கூட்டமாய்
வந்து சேர்ந்தன
அம்மையப்பன்
தரிசனம் தர
புறப்பட்டனர்
நாம் உருவாக்கிய உலகில்
நீ இருந்தாய்
நான் இருந்தேன்
உலகம் இருந்தது