Sunday 10 February 2019

மூன்று பணிகள்

உனக்கொரு அபூர்வ மோதிரம் பரிசளிக்கிறேன்
அணிந்து கொள்
அதனை உன் கண்கள் அறியும்
பிறர் பார்க்க முடியாது

அம்மோதிரம்
நீ
அழைத்தால்
மூன்று பணிகளைச் செய்யும்

உன் இயல்பை அது பாதுகாக்கும்
எவ்வாறெனில்
அற்பமான விஷயங்களை
உன் மனத்தில் அல்லது
உன் கவனத்தில்
இல்லாமல்
செய்து

உன் கனிவை அது பராமரிக்கும்
எவ்வாறெனில்
உன் தூய உள்ளத்தை
தூயதாகவே
வைத்திருந்து

உன் காதலை நினைவுறுத்தும்
பொன் ஒளிரும் ஒவ்வொரு சூரிய உதயத்திலும்

அழைக்காமலே

எப்போதாவது
உன் துக்கம் திரளுமெனில்
அது வும்
கண்ணீர் சிந்தும்