Saturday, 13 April 2019

பெருங்கதை

பசியில்
வலியில்
வேதனையில்
பிரிவில்
உறவில்
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர்
மனிதர்கள்
படைப்பாளி பார்த்துக் கொண்டிருக்கிறான்
மௌனமாக
பார்வையின் எல்லைகளுக்கு அப்பாலும்

ஆற்றங்கரை
பலாச மரத்தின்
பூக்களை நோக்கி வரும்
பறவைகளை
வைத்து
எழுதத் துவங்குகிறான்
ஒரு பெருங்கதையை