Thursday, 18 April 2019

நீ எங்கும் இருக்கிறாய்

இரண்டு ஜன்னல்கள் கொண்ட
நான்கு சுவர் உள்ள அறையில்
முழுவதும் உன் நினைவு
பரவியிருக்கிறது
என வெளியே சென்றேன்
நீ எங்கும் இருக்கிறாய்
வானில் மிதக்கும் புள்ளில்
குளத்தின் குளிர் நீரில்
அதன் படிகளுக்கருகில்
சில கணங்கள் மோனித்திருக்கும் மீன்களில்
எரியும் நெருப்பில்
நெற்கதிரில்
சூரியகாந்திப் பூவில்
அரச மர நிழலில்
அந்திப் பொழுதில்
வான்மீனில்
வெண்நிலவில்
நீ எங்கும் இருக்கிறாய்