Monday, 15 April 2019

உன் நினைவு
முதலில்
ஒரு தென்றலைப் போல
இனிமையாய்த்
தீண்டிச் சென்றது
அத்தீண்டலில்
நான் இருப்பதாய் நினைத்துக் கொண்டிருந்த
ரணங்கள்
இல்லாமல் ஆயின
பின்னர்
இரவில் படிக்கட்டில் கேட்கும்
ஆற்றுநீர்ச் சுழல்களின்
ஆடல்களின் ஓசையாய்க்
கேட்டுக் கொண்டிருந்தது
ஒரு குழந்தையைக்
கொஞ்சிக் கொண்டிருந்த போது
அதன் மழலைச்சொல்
உன்னை
நினைவில் முழுமையாகக்
கொண்டு வந்தது ஏன்
என்று யோசித்தேன்
அகல் தீபம் காற்றில்
அசையும் போது
உன்னை நினைத்து
எழுகிறது
உயிரின் பெரும் மூச்சு