கடற்கரையில்
அலைகள் நனைக்கும் மணலில்
ஈரமணலை
உடலெங்கும் பூசிக் கொண்டு
படுத்து
வானம் பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒருவன்
அவனை நீராட்டிக் கொண்டிருக்கின்றன
கடலின் அலைகள்
அறுவடைக் களம்
முழுதும்
பரவியிருக்கும்
நிழலுக்கு
மேலே விரிந்திருக்கும்
ஆலமரத்தின் அடியில்
கால்நீட்டி அமர்ந்து
ஆலிலைகளுக்கு
இடையே
பாயும் வெளிச்சம்
பார்க்கிறான்
ஓர் இளைஞன்
மாடித் தோட்டத்தில்
மாலை வெயிலில்
களைகளை நீக்கிக் கொண்டிருக்கிறாள்
ஒரு பெண்மணி
சிக்கலானதென
பொதுவாக
எண்ணப்படும்
உலகம்
பல சமயங்களில்
எளிதாக
மிக
இனிதாக
இருக்கிறது
அலைகள் நனைக்கும் மணலில்
ஈரமணலை
உடலெங்கும் பூசிக் கொண்டு
படுத்து
வானம் பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒருவன்
அவனை நீராட்டிக் கொண்டிருக்கின்றன
கடலின் அலைகள்
அறுவடைக் களம்
முழுதும்
பரவியிருக்கும்
நிழலுக்கு
மேலே விரிந்திருக்கும்
ஆலமரத்தின் அடியில்
கால்நீட்டி அமர்ந்து
ஆலிலைகளுக்கு
இடையே
பாயும் வெளிச்சம்
பார்க்கிறான்
ஓர் இளைஞன்
மாடித் தோட்டத்தில்
மாலை வெயிலில்
களைகளை நீக்கிக் கொண்டிருக்கிறாள்
ஒரு பெண்மணி
சிக்கலானதென
பொதுவாக
எண்ணப்படும்
உலகம்
பல சமயங்களில்
எளிதாக
மிக
இனிதாக
இருக்கிறது