Saturday, 13 April 2019

எளிய இனிய உலகம்

கடற்கரையில்
அலைகள் நனைக்கும் மணலில்
ஈரமணலை
உடலெங்கும் பூசிக் கொண்டு
படுத்து
வானம் பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒருவன்
அவனை நீராட்டிக் கொண்டிருக்கின்றன
கடலின் அலைகள்

அறுவடைக் களம்
முழுதும்
பரவியிருக்கும்
நிழலுக்கு
மேலே விரிந்திருக்கும்
ஆலமரத்தின் அடியில்
கால்நீட்டி அமர்ந்து
ஆலிலைகளுக்கு
இடையே
பாயும் வெளிச்சம்
பார்க்கிறான்
ஓர் இளைஞன்

மாடித் தோட்டத்தில்
மாலை வெயிலில்
களைகளை நீக்கிக் கொண்டிருக்கிறாள்
ஒரு பெண்மணி

சிக்கலானதென
பொதுவாக
எண்ணப்படும்
உலகம்
பல சமயங்களில்
எளிதாக
மிக
இனிதாக
இருக்கிறது