Sunday, 28 April 2019

அந்தர மலர்

உன் கை விரல்களால்
உன்னிடம் இருக்கும் எந்திரத்தின்
boltஐ  இறுக்கும் போது
தளர்த்தும் போது
கத்தியைக் கொண்டு
மெல்லிய சத்தத்துடன்
பீன்ஸ் நறுக்கும் போது
ஸ்கூட்டி  ஆக்ஸிலரேட்டரை
அதிவேகமாய்ச் சுழற்றி
தொடுவானம் நோக்கி செல்லும்
முனைப்புடன் விரையும் போது
ஒரு குழந்தையைக் கையில் வைத்திருப்பது  போல
கார் ஸ்டியரிங்கை சீராக்கும் போது
மூக்குத்தி வைரம் என ஒளிரும்
ஸ்மார்ட் ஃபோனின் டார்ச்சை ஏற்றும் போது
உன் முகம் கொள்ளும் அழகு
வான் மார்க்கமாகச் செல்லும் தேவதை ஒருத்தி
ஒரு கணம் நின்று புன்னகைத்துப் புறப்பட்டாள்
மரத்திலிருந்து  புவிக்கு இறங்கிய மலர்
அந்தரத்தில் சுழன்றதைக்
கண்ட கவிஞன்
பலநாள் கழித்து எழுதினான்
அது குறித்து
ஒரு  கவிதையை