Thursday 11 April 2019

நீ துயருறும் பொழுதுகளில்
சிலமுறை
என்னால் வார்த்தைகளால் உனை மீட்க முடியவில்லை
உன்னிடம் சொல்ல வேண்டிய
ஆறுதல் மொழிகள்
மௌனம் கொண்டு
பாறையெனக் கனக்கின்றன
உன் விழிநீரின் முன்
செயலற்று நிற்கிறேன்
அப்போது
நீ இந்த உலகில்
அவ்வளவு
தனியாக இருக்கிறாய்

பெரும்பாலையின்
ஒற்றை மரம்
ஓசையற்று
நின்றிருக்கிறது